கல்கிஸ்சை பிரதேசத்தில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருதானையில் இருந்து களுத்துறை நோக்கில் சென்ற ரயிலில் மோதுண்டு இந்த நபர் உயிரிழந்துள்ளதாக கல்கிஸ்சை பொலிஸார் கூறியுள்ளனர்.
அநுராதபுரத்தை சேர்ந்த 25 வயதான இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கல்கிஸ்சை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






