கணவரால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி மும்பை பெண் ஒருவர் டுவிட்டரில் கதறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் அசோக் பண்டிட், பெண் ஒருவர் கண்ணீர் விட்டு கதறும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், ஆட்டோ மொபைல் தொழில் செய்பவர் என்னுடைய கணவர் குர்ப்ரீத் சிங். அவர், என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சித்ரவதைக்கு உட்படுத்தி வருகிறார். என்னுடைய குழந்தைகளின் நலனுக்காகவே அவருடன் வாழ்ந்து வருகிறேன். ஆனால் சூதாட்டம், பெண்களுடன் தகாத உறவு உள்ளிட்ட பழக்கங்களால் அவர் என்னை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார்.
அண்மையில் நான் தூங்கிக் கொண்டிருந்த கட்டிலில், மின்சாரத்தைப் பாய்ச்சி என்னை கொலை செய்ய முயன்றார். இது தொடர்பாக, நான் பொலிசில் புகார் அளித்தேன். ஆனால், இது குறித்து வழக்கு பதியாத காவல் ஆணையர், என் கணவருடன் சேர்ந்துகொண்டு அவருக்கு சாதகமாகவே செயல்படுகிறார்.
ஒவ்வொரு முறையும் எனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு பொலிசாரிடம் கோரி வருகிறேன். ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து எந்த உதவியும் எனக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில், நேற்று எனது முதுகில் போத்தலால் உடைத்து காயம் ஏற்படுத்தியுள்ளார். மேலும், என்னுடைய பெயரில் இருக்கும் ஒரே வீட்டையும், என் கணவர் அவரது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவரால், என்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது. கடைசி முயற்சியாக சமூக ஊடகங்கள் மூலம் உதவி கேட்கிறேன். எனக்கு நீதி கிடைத்தாக வேண்டும். பொலிசார் அவ்வாறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், எனது உயிரை விடுவதைத் தவிர வேறு வழியில்லை’ என தெரிவித்துள்ளார்.
Cry of a women goes unheard with #KharPoliceStation. @MumbaiPolice @CPMumbaiPolice. Please do the needful immediately before something untoward happens. #BetibachaoBetiPadao. pic.twitter.com/9DK5Bn1nJz
— Ashoke Pandit (@ashokepandit) February 4, 2018






