கத்தியால் குத்திய காதலன் : காதலியின் கண்ணீர் வாக்குமூலம்!!

532

அன்பளிப்பு கொடுக்க வருவதாக தான் வந்தார், ஆனால் என்னை அவர் குத்திவிட்டார் என்று விசாரணையில் இளம்பெண் பொலிசாரிடம் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

சென்னையில் காதலியை பார்க்க வந்த காதலன், திடீரென்று காதலியை குத்திவிட்டு அவரும் தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவத்தைக் கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதைத் தொடர்ந்து பொலிசார் இருவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது காதலியான சரிதா கூறுகையில், சென்னை சோழவரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இன்ஜினீயரிங் முடித்துவிட்டு கோயமுத்தூரில் வேலை பார்த்து வரும் அவரும், நானும் பள்ளி பருவத்திலிருந்தே காதலித்து வந்தோம்.

வேலைக்கு சென்ற பின்னர் அவரது நடவடிக்கையில் மாற்றம் வந்தது, நாட்கள் செல்ல செல்ல காதலில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. பலமுறை போனில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அதுமட்டுமன்றி அவரது குடும்பத்திற்கும் என்னுடைய குடும்பத்திற்கும் ஒத்துவரவில்லை. அதை அவரிடம் நான் சொன்னேன், அதற்கு அவர், தன்னுடைய பெற்றோரை அழைத்துக் கொண்டு பெண் கேட்டு வருகிறேன் என்று கூறினார். ஆனால், என் குடும்பத்தில் ராஜேஷை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் பிரிந்துவிட முடிவு செய்ததால், காதலித்த காலங்களில் கொடுத்த பரிசுப் பொருட்களை கொடுக்க ராஜேஷ் சென்னை வந்தார். இருவரும் அண்ணா நகர் டவரில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவர் உன்னைப்பிரிந்து என்னால் வாழ முடியாது, தயவுசெய்து உன் முடிவை மாற்றிக்கொள் என்று கூறினார், அதற்கு நான் உனக்கும் எனக்கும் ஒத்துவராது, பிரிந்துவிடுவோம் என்று கூறினேன்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்திவிட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.