பட்டப்பகலில் தந்தையின் கண்முன்னே கடத்தப்பட்ட 2 வயதுக் குழந்தை!!

798

 
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் தந்தையின் கண்ணெதிரே அவரது 2 வயது குழந்தையை மர்ம நபர் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடத்திய நபர் நடந்து சென்றவாறே குழந்தை ஷரீன் பாத்திமாவை மிக லாவகமாக தூக்கிச் சென்றுள்ளான். மராட்டிய மாநிலம் மும்பையில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடை ஒன்றில் பொருட்கள் வாங்கச் சென்ற குழந்தையின் தந்தை தமது மகள் மாயமானது அறிந்ததும் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

குறித்த கடையின் வெளியே ஷரீன் விளையாடிக்கொண்டு இருந்ததாகவும், தமது கவனம் சிதறிய ஒரு நொடியில் இச்சம்பவம் நடந்துள்ளது எனவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமராக்களை பரிசோதித்த பொலிசார், அதில் பதிவாகியிருந்த காட்சிகள் அடிப்படையில் விசாரணையை துவக்கினர்.

6 மணி நேரத்திற்கு பின்னர் 28 வயதான சந்தீப் பராப் என்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து சிறுமியை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். சிறுமிமருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டாரா அல்லது சிறுமி கடத்தப்பட்டதன் நோக்கம் என்ன என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.