தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஷ்வரம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் முதியோர் இல்லம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆதவற்றோருக்கு அடைக்கலம் கொடுப்பதாக கூறி இங்கே தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சரியான உணவு மற்றும் பராமரிப்பு இல்லாமல் இருப்பதோடு அவர்களை வெளியில் விடவும் நிர்வாகம் மறுத்தது.
கடந்த 20ம் திகதி காப்பகத்திற்கு சொந்தமான வாகனத்தில் பிணத்துடன் வந்த மூதாட்டி சத்தம் போட்டார், அவர் அளித்த தகவலின் அடிப்படையில் காப்பகத்தின் உரிமையாளர் தோமஸிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்றைய தினம் காப்பகத்தில் தங்க விரும்பாத 86 முதியோர்கள், வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இன்று சுமார் 200 முதியோர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
காப்பகத்தை ஆய்வு செய்த போது பாதாள பிணவறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, லொக்கர் போன்ற வடிவமைப்பில் சிமென்ட் கல்லறைகளை அமைத்துள்ளனர்.
இங்கே இறந்தவர்களின் உடலை போட்டு மூடி விடுகின்றனர், உடலில் சதை அழுகி பொந்து வழியே குழியில் விழுந்த பிறகு மிஞ்சிய எலும்புகளை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தெரியவந்துள்ளது.






