காதலிக்க மறுத்ததால் தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவி பரிதாப மரணம்!!

728

மதுரையில் காதலிக்க மறுத்ததால் தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையை சேர்ந்தவர் மணிப்பாண்டி, இவரது மகள் சித்ராதேவி (வயது14). 9ம் வகுப்பு மாணவியான இவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 26) என்ற இளைஞன் கடந்த 16ம் திகதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

அக்கம்பக்கத்தினர் சித்ராதேவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக பாலமுருகனை பொலிசார் கைது செய்தனர். விசாரணையில், சித்ராதேவி காதலிக்க மறுத்ததால் பாலமுருகன் இவ்வாறு செய்தது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.