ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை : உருக்கமான கடிதம் சிக்கியது!!

815

இந்தியாவில் 4 வயது மகனுடன் மாடியில் இருந்து குதித்து தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலம் சூரத்தில் வசித்து வந்த விஜய் வகஸ்யா- ரேகா தம்பதியருக்கு 4 வயதில் வீர் என்ற மகன் உள்ளார்.

ஜவுளி வியாபாரம் செய்து வந்த விஜய், இரண்டு மாதத்திற்கு முன் தான் 12 அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள புதிய வீடு ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை வழக்கமாக தன் நண்பருடன் வாக்கிங் சென்ற விஜய் வீடு திரும்பிய சிறிது நேரத்தில் தன் மகன் மற்றும் மனைவியுடன் 12வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், விஜய் தன் சட்டை பையில் வைத்திருந்த கடிதம் ஒன்று பொலிஸ் விசாரணையில் சிக்கியுள்ளது.

அதில் தன் தற்கொலை யாரும் காரணமில்லை என்றும் தான் நடத்தி வந்த தொழிலை தன் சகோதரர் கவனித்துக் கொள்வார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் சந்தித்து வந்த நிதி நெருக்கடியும் கடன் தொல்லையும் தான் இந்த முடிவுக்கு காரணம் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய சூரத் பொலிஸ் ஆணையர் சதிஷ் சர்மா, இந்த சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது, இதுபோன்ற முடிவுகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும், எந்த தொல்லை இருந்தாலும் பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.