கணவன் கேட்ட ஒரே கேள்வியால் தூக்கில் தொங்கிய மனைவி!!

539

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேறு கல்யாணம் செய்து கொள்ளவா என தனது கணவன் கேட்டதால், மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியரான நடேசன் மற்றும் நிர்மலா தம்பதிக்கு கடந்த 11 ஆண்டுகளாக குழந்தை இல்லை.

குழந்தை பாக்கியம் வேண்டி சிகிச்சைகள் பலவற்றையும் இருவரும் எடுத்தும் வந்துள்ளனர்.

இந்த நிலையில் குழந்தையின்மைக்கு காரணம் நீதான் என கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இருப்பினும் இருவரும் ஒரே வீட்டில் தான் வாழ்ந்தும் வந்துள்ளனர். இதனிடையே வேறு திருமணம் ஒன்றை செய்து கொள்ள நடேசன் முயற்சி மேற்கொண்டுள்ளார். அதற்கு நிர்மலாவின் சம்மதத்தப் பெறவும் அவர் முயன்றுள்ளார்.

திருமண விடயத்தில் நடேசன் தீவிரமாக இருப்பதை அறிந்த நிர்மலா மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது நிர்மலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நிர்மலாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் தற்போது ஆலங்குடி பொலிசில் புகார் அளித்துள்ளனர்.