காணாமல் போன வயோதிப பெண் சடலமாக மீட்பு!!

1140

மட்டக்களப்பு – பேத்தாளை பகுதியில் நேற்று காணாமல் போன வயோதிப பெண் கருங்காலிச்சோலை ஆற்றில் இருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

பேத்தாளை விபுலானந்தா பாடசாலை வீதியைச் சேர்ந்த சின்னத்தம்பி நாகமுத்து (85) என்பவர் நேற்று காலை 09.00 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.

இவரை குடும்ப உறவினர்கள் தேடிவந்த நிலையில் இன்று மதியம் கருங்காலிச்சோலை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.