4 பிள்ளைகளின் தந்தை கொலை : சந்தேகநபர் மண்வெட்டியுடன் பொலிஸில் சரண்!!

847

கொட்டகலை, யதன்சைட் பகுதியில் நபரொருவரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த சந்தேகநபர் மண்வெட்டியுடன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் ரகு எனப்படும் 4 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இறந்தவரின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸில் சரணடைந்தவர் கொழும்பில் கூலி வேலை செய்யும் கொட்டகலை யதன்சைட் தோட்டத்தை சேர்ந்த குடும்பஸ்தராவார்.