நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் பதிலினால் பலர் குழப்பமடைந்தனர்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது சிங்கள அமைச்சர், உறுப்பினர்கள் தங்கள் தாய் மொழியில் வாக்குகளை வழங்கியிருந்தனர். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் “ஆம்” “இல்லை” என வாக்களித்திருந்தனர்.
இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க சிங்கள மொழியை மறந்து விட்டு “இல்லை” என தமிழில் எதிர்ப்பு வெளியிட்டிருந்தார்.
இதன்போது அங்கிருந்த அனைவரும் குழப்பத்துடன் அவரை நோக்கி பார்த்துள்ளனர். பின்னர் சிங்களத்தில் தனது வாக்கினை மீண்டும் பதிவு செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பு தேசிய தொலைகாட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் இலட்சகணக்கான இலங்கை மக்களின் அவதானம் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க மீது திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






