பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!

517

புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பும் பொது மக்களின் வசதி கருதி இன்றைய தினமும் விசேட பேருந்து சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகள் மட்டுமன்றி தனியார் பேருந்து உரிமையாளர்களும் இன்றைய தினத்தில் விசேட போக்குவரத்து சேவைகளை மேற்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அதே போன்று புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னர் கடமைகளுக்கு திரும்பும் பொதுமக்களின் நலன் கருதி தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் வரை விசேட போக்குவரத்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எனவே பொதுமக்கள் எந்தவிதமான அசௌகரியங்களும் இன்றி தங்கள் பயணங்களை மேற்கொள்ள முடியும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.