நவம்பர் மாத ராசி பலன்கள் – கடகம்!!

391

katakam

எதிலும் சிந்தித்தும் யோசித்தும் செயல் படுவீர்கள். நீங்கள் புதுமை யான விஷயங்களை படைக்க எண்ணுவீர்கள். இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்னைகள் தீரும். பல வகையான யோகங்கள் ஏற்படும். ராசிக்கு 2ல் செவ்வாயும், 4ம் இடத்தில் சூரியன், சனி, ராகு, புதனும் சேர்ந்து சஞ்சரிக்கிறார்கள். உடல் நோய்கள் நீங்கி ஆரோக்யம் உண்டாகும். மனக் குழப்பம் நீங்கும். ஆனால், பிறருடன் பழகும்போது நிதானம் தேவை.

தொழில், வியாபாரதில் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய கடன்களை வசூலிப்பதில் வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான நிலையே உண்டாகும்.

உத்யோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும். திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலனைத் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள்.

தம்பதியருக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும்.
குடும்பத்தில் சுபகாரியங்கள் நல்லபடியாக நடக்கும். பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்னைகள் தீரும். பணவரத்து கூடும். மனக் குழப்பம் நீங்கும். உடல் ஆரோக்யமும் கூடும். மாணவர்களுக்கு கல்வித் தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலையே காணப்படும். திறமையாக செயல்பட்டு பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியும். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டியது வரும்.

பரிகாரம் : திங்கட் கிழமைகளில் சோமவார விரதம் அனுஷ்டிப்பது கஷ்டங்களை போக்கும்.

சந்திராஷ்டம தினங்கள் : 12, 13 திகதிகளில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீஅம்பிகாயை நமஹ“ என்ற மந்திரத்தை 21 முறை சொல்லவும்.

சிறப்பு பரிகாரம் : திங்கள்தோறும் அருகம்புல் மாலை வாங்கி விநாயகருக்கு சாற்றி வழிபடவும். மனதில் தைரியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:
வளர்பிறை : ஞாயிறு, செவ்வாய், வெள்ளி.
தேய்பிறை : ஞாயிறு, புதன், வெள்ளி.