நவம்பர் மாத ராசி பலன்கள் – சிம்மம்!!

418

simmam

அரசாங்கத்தின் மூலம் அனுகூலமும் அதிகார தோரணையும் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளாத குணமுடையவராகவும் விளங்குவீர்கள். சிறிய விஷயத்திற்குக் கூட கோபம் வரும். நிதானமாக இருப்பது நன்மை தரும். ராகுவின் சஞ்சாரம் பணவரத்தைத் தரும். வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். புத்தி சாதூர்யத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.

வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பதுபோல் மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் கோபம் ஏற்படலாம். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்களில் அலைச்சல் ஏற்படும். வியாபார விரிவாக்கத் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம்.
பழைய கடன்களை வசூலிப்பதில் தாமதமான நிலை காணப்படும்.

உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச் சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணிகளின் காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். தந்தை வழி உறவினர்களோடு இருந்து வந்த கசப்புகள் நீங்கி உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.

கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர் வருகையாலும் செலவுகள் உண்டாகும்.
பெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதூர்யத்தால் எதையுமே சமாளிப்பீர்கள்.

மாணவர்கள் திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். கூடுதல் நேரத்தை ஒதுக்கி படிக்க வேண்டியதிருக்கும். மேல்படிப்புக்கு திட்டமிடுவீர்கள். கலைத்துறையினர் இந்த மாதம் கவனமாகச் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த அளவு வாய்ப்புகளும் குவியும்.

பரிகாரம் : ஞாயிற்று கிழமைகளில் சிவ வழிபாடு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 14, 15 திகதிகளில் வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம்.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீசிவாய நமஹ“ என்ற மந்திரத்தை 11 முறை சொல்லவும்.

சிறப்பு பரிகாரம் : மல்லிகை மலரை அம்பாளின் அர்ச்சனைக்காக கொடுக்கவும். அவளின் அருட்பார்வையால உங்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கும். துன்பங்கள் அனைத்தும் விலகி ஓடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், புதன், வெள்ளி.
தேய்பிறை  : புதன், வெள்ளி.