வவுனியா வைரவப்புளியங்குளம் குளக்கட்டுப் பகுதியில் வீசப்பட்ட குப்பையிலிருந்து நேற்று முன்தினம் அரச திணைக்களங்களின் ஆவணங்கள் சில மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்று முன்தினம் மாலை வைரவப்புளியங்குளம் குளக்கட்டுப்பகுதியில் இனந்தெரியாதவர்களினால் வீசப்பட்ட குப்பை கழிவுகளிலிருந்து அரச திணைக்களங்களின் ஆவணங்கள் சில மீட்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த ஆவணங்களை அங்கிருந்து பெறப்பட்டுள்ளதுடன் சிவில் பாதுகாப்புக்குழுவினரிடம் அவற்றை ஒப்படைத்து வைரவப்பளியங்குளம் பகுதியில் குப்பை வீசுவதைத்தடுக்க நடவடிக்கையினை அப்பகுதியிலுள்ள இளைஞர்கள் விழிப்புணர்வுக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் இதே பகுதிகளில் கோழிக்கழிவுகள், குப்பைகள் வீசுப்பட்டு வந்துள்ளன. அவற்றைத் தடுப்பதற்கும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






