இரவு நேரம் நடந்துள்ள கொடூர சம்பவம்!!(CCTV காணொளி)

564

மஹியங்கனை நகரில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு கடந்த 03 ஆம் திகதி இரவு வந்துள்ள சில நபர்கள் ஹோட்டலில் பணி புரிந்த இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளனர். குறித்த ஹோட்டல் உரிமையாளரின் மகனையே இவ்வாறு தாக்கியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான 21 வயதுடைய இளைஞர் தற்போது மஹியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து 6 பேர் மஹியங்கனை காவற்துறையினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் குறித்து மஹியங்கனை காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. குறித்த நபர்கள் இளைஞரை தாக்கும் காட்சி ஹோட்டலில் பெருத்தப்பட்டுள்ள C.C.T.V கெமராவில் பதிவாகியுள்ளது.