இங்கிலாந்தில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் இலங்கை மாணவன் முதலிடம்..!

699

1stஇங்கிலாந்தின் லோரியஸில் நடைபெற்ற 137 நாடுகளின் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான ஓவியக் கண்காட்சிப் போட்டியில் இலங்கை முதலிடத்தை பெற்றது.

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த போட்டியில் பங்கு பற்றிய அம்பாலங்கொட ஸ்ரீ தேவானந்த தேசிய பாடசாலையில் 8 ம் தரத்தில் பயிலும் எச். ஹசங்க சதுமால் டி சில்வா என்ற மாணவன் முதலிடத்தை பெற்றார்.

இவர் வரைந்த ஓவியம் இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் கைக்கடிகாரம் ஒன்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது.