பீகார் மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவியை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உட்பட 18 பேர் சீரழித்த விவகாரத்தில் மாணவியின் வாக்குமூலம் பொலிசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
10 வகுப்ப மாணவியின் வாக்குமூலம் இதோ, என்னை பள்ளி கழிவறையில் வைத்து சில மாணவர்கள் ஒவ்வொருவராக பாலியல் வன்கொடுமை செய்தனர்.
அதில் பள்ளி தலைமையாசியரின் மகனும் இருந்தான். பிறகு ரத்தம் படிந்த உடையோடு வெளியே வந்தேன். அதை பார்த்த தலைமையாசியர் அவரது அறைக்கு அழைத்தார்.
நடந்ததை அவரி டம் கூறி அழுதேன். என்னை சிரழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று எச்சரிக்கை செய்தார்.
பின்னர் அவரது அறையில் என்னை சுத்தம்செய்துகொள்ள சொன்னார். அதன்பின்னர் நான் அங்கிருந்து வந்துவிட்டேன். பத்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்குச் சென்றேன்.
அப்போது, தலைமையாசிரியர் அவரது அறைக்கு அழைத்தார். அங்கு சென்றபோது, என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.
நான் தப்பிக்க நினைத்தேன். மறுத்தால் என் வாழ்க்கையை நாசமாக்கிவிடுவதாக மிரட்டி, ஆசையை தீர்த்துக்கொண்டார் என கூறியுள்ளார்.