முல்லைத்தீவில் அதிசய பசுக்கன்று : படையெடுக்கும் மக்கள்!!

611

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், புளியங்குளம் பகுதியில் பசு ஒன்று இரண்டு தலைகளுடன் பசுக்கன்று ஒன்றை ஈன்றுள்ளது. இந்த சம்பவம் அப் பிரதேச மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டில் உள்ள பசுமாடு ஒன்றே இந்த அதிசய கன்றினை ஈன்றுள்ளது. மேலும், கன்றும் தாய்ப் பசுவும் நலமாக இருப்பதாக குறித்த மாட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

இந்த அதிசய பசுக்கன்றை நூற்றுக்கணக்கான மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.