இலங்கை – புழல் காவாங்கரையில் உள்ள இலங்கை அகதி முகாமில் வசிக்கும் யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் அதே அகதிகள் முகாமில் வசித்து வந்த இளைஞரை காதலித்து வந்ததாகவும், அவர் இலங்கை சென்று விட்டதால், விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் புழல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் 19 வயதுடைய துர்கா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். வீட்டில் அனைவரும் உறங்கச் சென்ற நிலையில் அதிகாலையில் குறித்த யுவதியை காணவில்லை என்று பெற்றோர் தேடியுள்ளனர்.
இதன்போது வீட்டில் உள்ள அறையில் சென்று பார்த்த போது, குறித்த யுவதி மின் விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தொடர்ந்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் உயிரிழந்து விட்டதாக வைத்திசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து புழல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.





