இலங்கையில் ஏற்படவுள்ள பாரிய நெருக்கடி : தவிக்கப் போகும் பொதுமக்கள்!!

545

இலங்கையில் பாரிய மின்சாரம் மற்றும் நிதி நெருக்கடி ஏற்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று உள்ளக தகவல்களை மேற்கொள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

2014ஆம் ஆண்டில் இருந்து 2018ஆம் ஆண்டு வரை இலங்கையில் முறையான மின் உற்பத்தித் திட்டம் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக எதிர்வரும் 5 வருடங்களில் பாரிய மின்சாரம் நெருக்கடி ஏற்படவுள்ளதாக மின்சார துறைத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதே காலப் பகுதியில் பாரிய நிதி நெருக்கடி ஒன்றும் ஏற்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல மணி நேர மின்சார விநியோக தடை ஏற்படும் நிலையை தடுக்க முடியாதென மின்சார பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் திட்டத்தை, பயன்பாடுகள் ஆணைக்குழு குழப்பியமையினால் எதிர்வரும் காலங்களில் 536 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Stochastic Dual Dynamic Program என்ற மென்பொருள் ஊாக இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மின்சார விநியோக தடை ஏற்படுமாயின் அது மாணவர்கள் உட்பட பல தொழில்துறைகளை வெகுவாக பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.