மாணவர் வீசாவில் மாலைதீவு யுவதிகளை இலங்கைக்கு அழைத்து வந்து விபச்சாரத் தொழில்!!

555

visaமாணவர் வீசாவில் மாலைதீவு யுவதிகளை இலங்கைக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க நகரங்களில் மாலைதீவு யுவதிகள் இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
20 முதல் 28 வயது வரையிலான மாலைதீவு பெண்கள் இவ்வாறு அழைத்து வரப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இலங்கையில் உயர்கல்வி கற்பதற்காக செல்லும் போர்வையில் பெண்கள் இவ்வாறு நாட்டுக்குள் பிரவேசிப்பதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

நீண்டகாலமாக இந்த பாலியல் தொழில் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இணையத் தளங்களைப் பயன்படுத்தி இந்த பாலியல் தொழில் நடத்தப்பட்டுள்ளது.

பகல் பொழுதுகளில் கொழும்பு உயர்கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாலை தீவு மாணவியர் இரவு வேளைகளில் பாலியல் சேவை வழங்கி வருகின்றனர்.

நட்சத்திர விடுதிகள், சொகுசு தொடர்மாடி வீடுகளில் இவ்வாறு குறித்த மாலைதீவு பெண்கள் பாலியல் சேவை வழங்கி வருகின்றனர். ஒர் இரவிற்காக 40000 ரூபா அறவீடு செய்யப்படுகின்றது.