பதவி விலகுவதாக மூன்று முறை சந்தர்ப்பங்களில் கூறியும் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை : பிரதமர்!!

771

டி.எம்.ஜயரத்னமூன்று சந்தர்ப்பங்களில் தான் பதவியை ராஜினாமா செய்வதாக கூறிய போதும் அதற்கு இடமளிக்கப்படவில்லை என பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

மகரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண மக்களுக்காக சிறையில் தண்டனை அனுபவித்துள்ளேன். இலஞ்சம் பெற்று, ஊழல் செய்து பணம் சம்பாதித்தேன் என்று என்னை எவராலும் கூறமுடியாது.

நான் ஒருபோதும் அப்படி செய்தவன் அல்ல. மோசடிகளை செய்து நான் பணம் சம்பாதிக்கவில்லை. நான் மூன்று முறை பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்துள்ளேன் என்றார்.