வவுனியாவில் வீதியில் முச்சக்கரவண்டியை கைவிட்டு தப்பியோடிய சாரதி!!

807

தப்பியோடிய சாரதி

வவுனியாவில் முச்சக்கரவண்டி ஒன்றினை பொலிசார் சோதனை மேற்கொண்டபோது முச்சக்கரவண்டியை கைவிட்டு சாரதி தப்பிஓடியுள்ளார். இதையடுத்து முச்சக்கரண்டியை சோதனைக்குட்படுத்தியபோது பொதி செய்யப்பட்ட கஞ்சாவை மீட்டுள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 7மணியளவில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேயவிக்கிரம தலைமையில் கீழ் செயற்படும் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் போதை ஒழிப்புப் பிரிவினருடன் பூந்தோட்டம் மயானத்திற்கு அருகில் முச்சக்கரண்டி ஒன்றினை வழிமறித்த பொலிசார் அதில் சோதனை செய்ய முயற்சித்துள்ளனர்.

இதன்போது முச்சக்கரவண்டியைச் செலுத்தி வந்த சாரதி முச்சக்கரவண்டியை கைவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும் முச்சக்கரவண்டியை சோதனைக்குட்படுத்தியபோது 1கிலோ 265மில்லிக்கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிசார்,

தப்பிச் சென்ற சந்தேக நபரைத் தேடிவருவதாகவும் முச்சக்கரவண்டி கைப்பற்றப்பட்ட கஞ்சா என்பன பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.