நாட்டின் பல பாகங்களில் இன்றும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக தென் பகுதிகளில் அதிக மழை பெய்யலாம் எனவும் அது 100 மில்லி மீற்றர் வரை இருக்கலாம் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இடி, மின்னலில் இருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





