சாரதி வழங்கிய வாக்குமூலம்

மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்னால் நேற்று இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

திருகோணமலையில் இருந்து தியதலாவை நோக்கி பயணித்த தனியார் பேருந்து மற்றும் மட்டக்களப்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த 10 பேர் உயிரிழந்த நிலையில் இருவர் படுகாயமடைந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கொழும்பில் உறவினர்களை பார்க்க சென்ற இந்த குடும்பத்தினர், நுவரெலியா பிரதேசத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பிற்கு செல்லும் போது அவர்கள் இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சாரதி வழங்கிய வாக்குமூலத்தில்,

“நான் அதிகாலை 1.15 மணியளவில் மஹியங்கனை நகரில் உள்ள உணவகம் ஒன்றில் பேருந்தை நிறுத்தினேன். அங்கு தேனீர் அருந்திய பின்னர் மீண்டும் பயணத்தை ஆரம்பித்தேன். பயணத்தை ஆரம்பித்து ஒரு சில நிமிடங்களில் அதிக வேகத்துடன் பிழையான பகுதியில் வேன் ஒன்று வருவதனை நான் அவதானித்தேன்.

நான் முடிந்த அளவு ஓரத்திற்கு பேருந்தை நகர்த்தி கொண்டு சென்றேன். எனினும் அந்த வேன் தனது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நெருங்கிவந்தது. நொடிப்பொழுதில் இடி விழுந்ததனை போன்று இந்த வேன் மோதிச் சென்றது. நான் எவ்வளவு முயற்சித்தும் அதனை தடுக்க முடியவில்லை” என சாரதி குறிப்பிட்டுள்ளார்.






