சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 71 வயதுடைய இந்திய பிரஜையே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார். மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை சிலாவத்துறை பச்சவாணிக்குளம் பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 45 வயதான இந்தியர் இன்று மன்னார் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.





