கிளிநொச்சியில் கோர விபத்து : ஒருவர் பலி!!

475

கிளிநொச்சி சேவியர் கடை சந்தி அண்மித்த பகுதியில் நேற்று (30.04.2019) மாலை விபத்து ஒன்று இடப்பெற்றுள்ளது.

வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த முதியவரை பின்னால் வந்த மோட்டார் சைக்கிலில் பயணித்தவர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் துவிச்சக்கர வண்டியில் சென்றவருடன் மோதுண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த சதாசிவம் சங்கநிதி வயது 83 என்ற முதியவரை இவ் விபத்தில் பலத்த காயங்களுடன் 1990 நோயாளர் காவு வண்டியில் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்தபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிலில் பயணித்தவரும் பலத்த காயங்களுடன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்க விடயம்.

இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.