வவுனியா கோவிற்குளத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்!!

668

வவுனியா கோவிற்குளத்தில் இன்று (02.05.2019) காலை 9.30 மணியளவில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே வெளியிட்டுள்ளார்.

நாட்டின் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தினையடுத்து வவுனியா கோவிற்குளம் எட்டாம் ஒழுங்கையில் இராணுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது குறித்த ஒர் வீட்டிலிருந்து 450- 750 வலுக்கொண்ட நான்கு மின்சார வயர் சுருள்கள், இராணுவத்தினரின் சீருடை, இராணுவ கையுறை , இராணுவச் சப்பாத்து, டிஜிட்டல் மீற்றர் போன்றவை கைப்பற்றியதுடன் இதனை வீட்டில் வைத்திருந்த நபரும் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

கைப்பற்றப்பட்ட பொருட்களை வவுனியா பொலிஸ் நிலையத்தில் வைத்து வவுனியா வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே மற்றும் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வராட்சி ஆகியோரின் முன்னிலையில் ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட இராணுவத்தினரின் சீருடை , இராணுவ கையுறை, இராணுவச் சப்பாத்து போன்றன புதியவை எனவும் அவை இதுவரை பாவனைக்குட்படுத்தப்படவில்லையென வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார்.