வடக்கு மக்களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார் : செல்வம் அடைக்கலநாதன்!!

648

Selvamவட மாகாண தமிழ் மக்களை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இராணுவத்தினையும் ஆளுநரையும் வைத்து வடக்கு மக்களை அடக்கி ஆட்சி நடத்துவதில் அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இரணைமடு – யாழ்ப்பாணம் நீர் விநியோகத்திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். கூட்டமைப்புக்குள் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் முரண்பாடுகள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.