காவியுடை அணிந்தவர்களுக்கு புத்தியில்லை : பிரதமர் சீற்றம்!!

866

PMபௌத்த பிக்குகள் மத்தியில் காவி உடை அணிந்தவர்களும் இருப்பதாகவும் காவி அணிந்திருந்தாலும் அவர்களுக்கு புத்தியில்லை எனவும் பிரதமர் டி.எம். ஜயரத்ன நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இப்படியானவர்கள் கூறும் விடயங்கள் தொடர்பில் குழப்பமடைய தேவையில்லை. இப்படியானவர்கள் சகல மதங்களிலும் இருக்கின்றனர் என்றும் பிரதமர் கூறினார்.

ஹெரோயின் போதைப் பொருள் கொள்கலனை விடுவிக்க பிரதமரின் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டமை தொடர்பில் பிரதமர் கைது செய்யப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்திருந்தார்.

அத்துடன் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.