சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடை நீங்கியது : இணைய பாவனையாளர்கள் மகிழ்ச்சி!!

432

தடை நீங்கியது

சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலையினை அடுத்து நாடு முழுவதும், சமூக வலைத்தளங்கள் மீது தடை விதிக்கப்பட்டிருந்து.

சட்டவிரோதமான முறையில் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்திய சிலரும் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தடை நீக்கம் தொடர்பான தீர்மானத்தினை எடுத்துள்ளது.

கடந்த 13 ஆம் திகதி பல பிரதேசங்களில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையினை கடுப்படுத்துவதற்கு பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உட்பட சமூக வலைத்தளங்களின் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.