பிரதேச மக்களுக்காக பெண்கள் செய்த அட்டகாசம்!!

454

ரிதிமாலியெத்த மற்றம் மஹியங்கனை பிரதேச சபைகளை சேர்ந்த உறுப்பினர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமையினால் குழப்ப நிலை ஏற்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த பெண் உறுப்பினர்கள் மூவர், நகர மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மஹாவலி எல்லையில் வசிக்கும் 47 குடும்பங்களை சேர்ந்த மக்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்களை தங்கள் இடங்களில் இருந்து வெளியேற்றுவதற்கு மஹவலி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு குறித்த உறுப்பினர்கள் மூவரும் இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

எனினும் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கடிதம் மூலம் வாக்குறுதியளித்த பின்னர் மூன்று உறுப்பினர்களும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டனர்.