தோண்டி எடுக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளின் சடலங்கள்!!

425

பயங்கரவாதிகளின் சடலங்கள்

சாய்ந்தமருதில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தி பலியான சில பயங்கரவாதிகளினதும் அவர்களின் குடும்பத்தாரினதும் சடலங்கள் இன்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

அம்பாறை பிரதான நீதவான் அசங்கா ஹெட்டிவத்த மற்றும் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ருச்சிர நதீர ஆகியோரின் முன்னிலையில் குறித்த சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட தற்கொலை செய்துக் கொண்ட சந்தேகநபர்களின் உடற் பாகங்கள் மரபணு பரிசோதனைகளுக்காக இரசாயன பகுப்பாய்வு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற குறித்த தாக்குதலின்போது 15 பேர் உயிரிழந்திருந்தனர். பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட சூத்திரதாரியான சஹ்ரான் ஹஸீமின் தந்தை, அவரின் சகோதரர்கள் இரண்டு பேர் மற்றும் ஒரு சகோதரரின் மனைவி ஆகியோரும் சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.