பிக்பாஸ் வரலாற்றில் முதல் தடவையாக இரண்டு இலங்கையர்கள்!!

307

இரண்டு இலங்கையர்கள்

இந்தியாவில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வரும் பிக் பாஸ் சீசன் 1, சீசன் 2, என்ற இரண்டு பாகமும் பெரிய வெற்றி பெற்றன. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3ஆவது பாகம் நேற்றையதினம் வெகு பிரம்மாண்டமாக ஆரம்பமாகியிருந்தது.

ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் ரசிகர்கள் மத்தியில் மெல்ல, மெல்ல தீயாய் பற்றிக்கொண்டது. மக்களின் மனதை எளிதாக வெல்ல இந்த நிகழ்ச்சி பிரபலங்களுக்கு ஒரு பாலமாக அமைகிறது.

இந்தநிலையில், குறித்த நிகழ்ச்சியில் இரண்டு இலங்கையர்கள் பங்கேற்றுள்ளமை தற்போதைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஷ்யமாக அமைந்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த இளம் தொகுப்பாளினி, செய்திவாசிப்பாளரான லோஷ்லியா மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்சன் எனப்படும் ஒருவரும் கலந்து கொண்டுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களின் விபரம் வருமாறு..