கோர விபத்து

கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும், மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கிரான்ட்பாஸில் நேற்று மதிய வேளையில் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளும், கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதுண்டமையினாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. பாடசாலையில் இருந்து மகளை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதில் எட்டு வயது மகளும் 35 வயதான தாயும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே சிறுமி பலியாகி உள்ளதுடன், படுகாயம் அடைந்த தாய் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் தாயும் மகளும் சென்ற வேளையில், வேக கட்டுப்பாட்டை இழந்தமையினால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




