ஐஸ் மழை

பொலன்நறுவை மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களாக இருந்து வந்த வறட்சி மற்றும் வறட்சியான காலநிலை முடிவுக்கு வந்துள்ளதுடன் இன்று மழை பெய்துள்ளது.

வெலிகந்தை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஐஸ் மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் மன்னம்பிட்டி பகுதியிலும் ஐஸ் மழை பெய்துள்ளது.

பொலன்நறுவையில் கடந்த ஆறு மாதங்களாக நிலவிய வறட்சி காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அத்துடன் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவியது.





