நாடாளுமன்ற உறுப்பினர்களின் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி : இலங்கை பங்கேற்காமைக்கு காரணம் இதுவா?

634

கிரிக்கெட் போட்டி

பிரித்தானியாவில் இடம்பெற்ற சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை பங்கேற்கவில்லை.

இதற்கு காரணம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக் குதல்களையடுத்து இலங்கை தமது அணியை அங்கு அனுப்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் இலங்கை அதனை தவிர்த்து விட்டது.

இந்த போட்டியிலே இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூஸ்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அணிகள் பங்கேற்றிருந்தன.

கடந்த வெள்ளிக்கிழமை இறுதிப்போட்டி நடைபெற்றது. இதன்போது, பாகிஸ்தான் நாடாளுமன்றக் குழு பங்களாதேஷ் நாடாளுமன்றக் குழுவை 9 விக்கட்டுக்களால் தோற்கடித்து வெற்றியாளர் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

இலங்கையை பொறுத்தவரை இதற்கான அழைப்பிதழ் விடுக்கப்பட்டிருந்த போதும், உயிர்த்த ஞாயிறு தாக் குதலின் பின்னர் அதற்கான மனநிலையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை என்ற அடிப்படையிலேயே அந்த அழைப்பை தாம் நிராகரித்து விட்டதாக இலங்கையின் சபாநாயகர் அலுவலகம் அறிவித்திருக்கின்றது.