குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எச்சரிக்கை : வாழ்நாள் முழுவது அனுமதிப் பத்திரம் ரத்து!!

610

எச்ச ரிக்கை

வாழ் நாள் முழுவதும் சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யும் வகையில் சட்டத் திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பயணிகள் போக்குவரத்து வாகனமொன்றை செலுத்தும் சாரதி குடி போ தையில் வாகனத்தைச் செலுத்தினால் அல்லது குடி போ தையில் வாகன விபத்தொன்றை மேற்கொண்டிருந்தால், குறித்த சாரதிக்கு வாழ்நாள் த டை விதிக்கப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு 10ம் இலக்க மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் 216 திருத்தத்தின் அடிப்படையில் குடி போ தையில் வாகனம் செலுத்தினால் மூன்று வகையிலான தண்ட னைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தனியார் வாகனமொன்றை செலுத்திய சாரதி குடி போ தையில் இருந்திருந்தால், 25000 ரூபா முதல் 30000 வரையிலான அப ராதம் அல்லது 3 மாத சி றைத் தண் டனை விதித்தல் அல்லது இரண்டு தண்ட னைகளையும் விதித்தல் மற்றும் 12 மாத காலம் சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்படும்.

பயணிகள் போக்குவரத்து வாகனமொன்றின் சாரதி குடி போ தை யில் வாகனத்தை செலுத்தியிருந்தால் 25000 ரூபா முதல் 30000 வரையிலான அப ராதம் அல்லது 6 மாத சி றைத்த ண்டனை விதித்தல் அல்லது இரண்டு தண் டனைகளையும் விதித்தல் மற்றும் சாரதிக்கு வாகனம்செலுத்த வாழ்நாள் தடை விதிக்கப்பட முடியும்.

இதேவேளை, குடி போ தையில் வாகனம் செலுத்தி வாகன விபத்து ஒன்றை மேற்கொண்டிருந்தால் 100000 ரூபா முதல் 150000 வரையிலான அபராதம் அல்லது 2 ஆண்டுகளுக்கு குறையாத 10 ஆண்டுகளுக்கு மேற்படாத சி றைத்த ண்டனை விதித்தல் அல்லது இரண்டு தண் டனைகளையும் விதித்தல் மற்றும் சாரதிக்கு வாகனம்செலுத்த வாழ்நாள் தடை விதிக்கப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறைத் திணைக்களம் இது பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.