வவுனியாவில் போக்குவரத்து பொலிசாரின் நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்திய இளைஞனை தாக்கிய பொலிசார்!!

550

போக்குவரத்து பொலிசாரின்..

வவுனியா நகரப் பகுதியில் போக்குவரத்து பொலிசாரின் நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்தியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரப்பகுதியில் தமிழ் மத்திய மகாவித்தியாலயம் முன்பாக நேற்று இரவு 9 மணியளவில் போக்குவரத்து பொலிசார் கடமையில் நின்று வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஏ9 வீதியால் வவுனியா நகரப்பகுதி நோக்கி வந்த முச்சக்கர வண்டி ஒன்றை போக்குரத்து பொலிசார் மறித்து ஆவணங்களை பரிசீலித்தபோது குறித்த முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் இருந்தவர்களில் ஒருவர் ம துபோ தையில் போக்குவரத்து பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தா க்குதல் நடத்த முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த இளைஞரை பொலிசார் கைது செய்ய முற்பட்ட போது, போக்குவரத்து பொலிசாரும் குறித்த இளைஞரும் வீதியில் கட்டிப் பிடித்து இழுபட்டனர்.

இதன்போது குறித்த இடத்திற்கு மேலதிக போக்குவரத்து பொலிசார் வரவழைக்கப்பட்டதுடன், சுமார் 10 இற்கும் மேற்பட்ட பொலிசார் இணைந்து குறித்த இளைஞனை மடக்கிப் பிடித்து விலங்கிட்டு கைதுசெய்து கொண்டுசென்றனர்.

இதன்காரணமாக குறித்த பகுதியில் சுமார் அரைமணி நேரமாக பதற்ற நிலை காணப்பட்டதுடன், ஏ9 வீதிப் போக்குவரத்தும் இடையிடையே பாதிப்படைந்தது. இதேவேளை, முச்சக்கர வண்டியில் பயணித்த தம் மீது பொலிசார் வேண்டுமென்றே தா க்குதல் நடத்தியதாக குறித்த இளைஞனருடன் முச்சக்கரவண்டியில் பயணித்தவர் தெரிவித்தார்.