வவுனியாவில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

655

கனமழை

வவுனியாவில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்தமையினால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு கடும் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில் காலை 10 மணியளவில் மழை சற்று ஓய்ந்தது.

எனினும் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டதுடன் நகர்ப்பகுதியில் மக்களின் நடமாட்டம் மிகக்குறைவாக காணப்பட்டது.

பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் அரச உத்தியோகத்தர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்திருந்ததுடன் போக்குவரத்தும் பாதிப்படைந்திருந்தது.

இதேவேளை வட பகுதியிலும் பரவலாக மழை பெய்திருந்ததுடன் பல வீதி அபிவிருத்திப் பணிகள் பாதிப்படைந்துள்ளதாக ஒப்பந்தக்காரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.