தென்னை மரங்களில் இருந்த சுமார் 140 தேங்காய்கள் மாயம் : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

549

தேங்காய்கள் மாயம்

தென்னை மரங்களில் இருந்த சுமார் 140 தேங்காய்கள் மாயமாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐயங்கேணியைச் சேர்ந்த சேகுமுஹம்மது செய்னம்பு (வயது 60) என்பவரால் இன்றைய தினம் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது முறைப்பாட்டில்,

ஏறாவூர் 3ஆம் குறிச்சியிலுள்ள எனது சகோதரனின் வீட்டையும், வீட்டு வளவிலுள்ள பயன்தரும் மரங்களையும் நானே பராமரித்து வருகின்றேன். அங்குள்ள 7 தென்னை மரங்கள் அதிகளவான தேங்காய்களுடன் காணப்பட்டன.

ஆனால் சனிக்கிழமை நான் வழமை போல் தென்னை மரங்களைப் பராமரிப்பதில் ஈடுபட்டிருந்தபோது தென்னை மரங்களில் இருந்த சுமார் 140 தேங்காய்கள் மாயமாகியுள்ளதை அவதானித்தேன்.

எனது பராமரிப்பிலிருந்த தேங்காய்கள் திருடப்பட்டுள்ளமை வருத்தமளிக்கிறது. எனவே, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரிடமிருந்து தகுந்த நஷ்டஈட்டை பெற்றுத் தர வேண்டும் என்பதுடன் சந்தேகநபரை பொலிஸார் எச்சரிக்கவும் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.