வவுனியாவில் ம ர்மமான முறையில் உ யிரிழந்த யானை தொடர்பில் விசாரணை!!

714

வவுனியாவில்..

வவுனியா – கனகராயன்குளம் பொலிஸ் பிரவிற்குட்பட்ட புதுவிளாங்குளம் பகுதியில் ம ர்மமான முறையில் உ யிரிழந்த நிலையில் யானையின் ச டலமொன்று காணப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் நேற்றைய தினம் யானையின் ச டலம் ஒன்றினை அவதானித்த பொதுமக்கள் கனகராயன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் தெரிவித்துள்ளதுடன், யானை இ றந்தமைக்கான காரணம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.