வவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல் : மூவர் வைத்தியசாலையில்!!

787

மூவர் வைத்தியசாலையில்

வவுனியாவில் இரு குழுக்களுக்கு இடையில் நேற்றிரவு மோ தல் சம்பவமொன்று இடம்பெற்றிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

திருநாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த மூன்று இளைஞர்கள் சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோ தல் சம்பவத்தின் போது மூன்று மோட்டார்வண்டிகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், இரு வீடுகளின் யன்னல் கண்ணாடிகள், வேலித்தகரம், வாயிற்கதவுகள் என்பனவும் உடைக்கப்பட்டுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தேடும் நடவடிக்கையில் வவுனியா கு.ற்றத்தடுப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.