தேர்தல் காரியாலயம்

வவுனியா ஈரற்பெரியகுளத்தில் பொதுஜன முன்னணியின் வன்னி தேர்தல் தலைமை காரியாலயம் நாமல் ராஜபக்சவினால் இன்று (18.10.2019) திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா சிங்கள பிரதேச சபையின் பிரதி தவிசாளர் வசந்த ராஜ கருணா தலைமையில் பொதுஜன முன்னணியின் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் பொதுஜன முன்னணியின் சார்பாக பிரபா கணேசன், சிறிரெலோ கட்சியின் செயலாளர் ச.உதயராஜா, முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரத்தின, முன்னாள் வடக்குமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, ஆகியோர் கலந்துகொண்டனர்.





