வவுனியாவில் வீதி ஆக்கிரமிக்கப்படுவதாக தெரிவித்து இருவர் உண்ணாவிரதப் போ ராட்டம்!!

788

உண்ணாவிரதப் போ ராட்டம்

வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் பகுதியில் வீதியை தனியொருவர் ஆக்கிரமிப்பதாகவும் அதற்கு நகரசபை தலைவர் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்து இருவர் உண்ணாவிரத போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா சூசைப்பிள்ளையார் குளம் கிராமத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள விமானப்படை தளத்திற்கும், கிராமத்திற்கும் இடையில் செல்லும் வீதியை தனி ஒருவர் ஆக்கிரமித்து வீடமைப்பதாகவும் வீதியை போக்குவரத்து செய்ய ஏற்ற வகையில் நகரசபை சீர்செய்து தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாதிக்கப்பட்ட நபர்கள் போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளான பெண் கருத்து தெரிவிக்கையில், யு த்தம் காரணமாக இடம்பெயர்ந்து கடந்த 28 வருடங்களாக இவ்விடத்தில் வசித்து வருகின்றோம். நகரசபை தலைவர் இப்பகுதியால் முச்சக்கர வண்டி செல்லும் வகையில் வீதிக்கு இடம் விடுமாறு கோரியதையடுத்து வேலியை அகற்றி இடத்தை விட்டு கொடுக்கவுள்ளோம் என தெரிவித்தார்.

இக்குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவித்த நகரசபை தலைவர் இ.கௌதமன், நகரசபைக்கு சொந்தமான இப்பாதையானது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு நகரசபையில் அனுமதி பெறப்படவில்லை.

நகரசபை யாருக்கும் பக்கசார்பாக நடந்து கொள்ளவில்லை அப்பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் எதிர்காலம் மற்றும் வாழ்வாதரங்களை அடிப்படையாக கொண்டு நகரசபை செயல்படுகின்றது.

எதிர்காலத்தில் இ ராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆ க்கிரமிப்பு பகுதிகள் மீளப் பெறப்பட்டு நிரந்தரமான பாதை அமைக்கப்படும் என தெரிவித்தார்.