வவுனியா பொலிசார் முன்னிலையில் கா ணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மடக்கிப் பிடித்த பெண்களால் அச்சநிலை!!

601

பொலிசார் முன்னிலையில்..

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்ற போது எ திர்ப்பு தெரிவித்த கா ணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இரா.சம்மந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரது வாகனத் தொடரணி மீது செருப்பால் தா க்க முற்பட்டனர்.

இதன்போது அங்கு நின்ற பொலிசாருடன் சிவில் உடையில் நின்ற பெண்கள் மூவரும் கா ணாமல் ஆக்கப்பட்டோரை ம டக்கிப் பிடித்தனர். இதனால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிவில் உடையில் கா ணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை பிடித்தவர்கள் யார் எனவும் கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தாம் மக்கள் பிரதிநிதிகளான இரா.சம்மந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை சந்திக்க சென்றபோது பொலிசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் கூட்டம் முடிந்ததும் சந்திப்பார்கள் எனவும் கூறினர்.

ஆனால் கூட்டம் முடிந்ததும் அவர்கள் எம்மை பொருட்படுத்தாது வாகனத்தில் பா துகாப்புடன் சென்றனர். அப்போது அவர்களை வழிமறிக்க முற்பட்ட போது பொலிசாருடன் இணைந்து சிவில் உடையில் மூன்று பெண்கள் எம்மை பிடித்தனர்.

அவர்கள் யார் என எமக்கு தெரியாது. எனவே இது தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் என கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த பெண்கள் மூவரும் பொலிசார் என தெரியவருகிறது.