வவுனியாவிலும் தாய்நாட்டை அழகாக்குவோம் வேலைத்திட்டம் முன்னெடுப்பு!!

484

தாய்நாட்டை அழகாக்குவோம் வேலைத்திட்டம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் கருத்திட்டத்தில் தாய் நாட்டை அழகாக்குவோம் என்னும் வேலைத்திட்டம் இன்று (26.11.2019) வவுனியாவிலும் ஆரம்பமானது.

குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றி தாய் நாட்டை அழகாக்குவோம் என்னும் வேலைத்திட்மானது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் கருத்திட்டத்தின் கீழ் பொலிசாரின் துணையுடன் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் வவுனியா பொலிசாராலும் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா நகரப்பகுதியில் குறித்த செயற்திட்டத்தை முன்னெடுத்த பொலிசார் கழிவுகளை அகற்றுதல் மற்றும் குப்பைகளை போடுதல் தொடர்பாக வர்த்தக நிலையங்களுக்கு சென்று விளக்கமளித்தனர்.

கழிவுகள் அகற்றும் செயன்முறை தொடர்பாகவும் பொலிசார் இதன்போது கவனம் செலுத்தினர்.