வவுனியா ஒமந்தை பகுதியில் பொலிஸாரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சிரமதானம்!!

569

சிரமதானம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அமைய ‘மனிதர் நேசிக்கும் சுகாதாரமிக்க சுற்றாடலை உருவாக்குவோம்’ எனும் கருப் பொருளில் ஒமந்தை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் ஒமந்தை நகரை சுத்தம் செய்யும் சிரமதான நிகழ்வு இன்று (28.11.2019) காலை இடம்பெற்றது.

ஒமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஸ் டி சில்வா தலைமையில் இடம்பெற்ற குறித்த சிரமதான நிகழ்வில் ஓமந்தை வர்த்தகர்கள், சமூதாய பொலிஸ் குழு பிரதிநிதிகள், ஒமந்தை பொலிஸார், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது ஒமந்தை நகர சுற்றுவட்ட பகுதிகளில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டதோடு வடிகான்களும் சுத்தம் செய்யப்பட்டது.