வவுனியாவில் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் : பொலிஸாருடன் இணைந்து மாணவர்களும் டெங்கு ஒழிப்புப் பணியில்!!

705

அதிகரிக்கும் டெங்கு தாக்கம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அமைய வவுனியா பொலிஸாரினால் பல்வேறு செயற்றிடங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வவுனியா கண்டி வீதி மூன்றுமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையில் வவுனியா பொலிஸாரினால் இன்று (28.11.2019) காலை 10.30 மணியளவில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னேடுக்கப்பட்டது.

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் கேட்போர் கூடத்தில் பொலிஸாரினால் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை வளாகத்தினை டெங்கு அற்ற பகுதியாக மாற்றும் செயற்றிட்டத்தில் தொழிற்பயிற்சி மாணவர்களுடன் இணைந்து பொலிஸாரும் சிரமதான பணியில் ஈடுபட்டனர்.